Hinduism For All
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

A Website on Introduction of the World's Oldest Way of Life

Hinduism - It is a Way of Life.  Hinduism For All has been launched for simple answers to Complicated and Curious questions.

You are not connected. Please login or register

Importance of Gayatri Mantra (Tamil)

Go down  Message [Page 1 of 1]

1Importance of Gayatri Mantra (Tamil) Empty Importance of Gayatri Mantra (Tamil) Fri Nov 25, 2011 3:12 pm

Admin

Admin
Admin
Admin

1. காயத்ரி ஜபம் பத்தி சொல்லுங்க!
எளிமையா எல்லோரும் செய்கிற விதத்தை பார்க்கலாம்.

2. அப்படின்னா இன்னும் விரிவான வழி இருக்கா?
ஆமாம். மந்திர சித்திக்காக செய்யறது விரிவான வழி. அதில இன்னும் கூடுதல் படிகள் உண்டு.
எளிமையான வழியில... முதல்ல எப்படி உட்காருகிறதுன்னு பார்த்தோம். முதுகு நிமிர்ந்து இருக்கும் வரை ஜபத்தில மனக்குவிப்பு (கான்சன்ட்ரேஷன்) இருக்கும்.
மேலும் மனக்குவிப்பு வர ப்ராணாயாமம் செய்யணும். அதையும் தனியா பாத்தோம்.

3. இருங்க, முதல்ல எவ்வளோ காயத்ரி செய்யணும்ன்னு சொல்லுங்க.
அந்த காலத்தில செய்தது ஒவ்வொரு வேளையும் ஆயிரம் என்றே பல ரிஷிகளும் சொல்லியிருக்கிறார்கள். சிலர் எட்டு சேர்த்து ஆயிரத்தெட்டு என்றதால் அந்த பழக்கமும் இருக்கு. அவ்வளவு செய்ய இந்த அவசர காலத்திலே நேரம் இல்லை என்பதால 108 ஆவது நிச்சயம் செய்யணும்.

4. எண்ணிகிட்டுதான் செய்யணுமா? அது மனக்குவிப்பை தடுக்குதே?
எண்ணாமல் செய்தால் பலனில்லை என்றே பலரும் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே எண்ணியே செய்ய வேண்டும்.

5. சரி எப்படி எண்ணுவது?
அக்ஷர மாலை, ஜப மாலைன்னு பலதும் இருந்தாலும் விரல்களில் எண்ணி செய்வதே நல்லது, சுலபமானது.

6. அந்த வழி என்ன?
இரண்டு கைகளையும் பக்கத்து பக்கத்துல சேர்த்து வைத்தே ஜபம் செய்தாலும் வலது கையிலேதான் எண்ணனும். முதல் ஜபம் செய்யும் போது வலது கை கட்டைவிரலோட நுனியை மோதிர விரலோட நடு ரேகையில் வைக்கணும். இரண்டாம் ஜபத்துக்கு கட்டை விரலோட நுனியை அடுத்து கீழே இருக்கிற ரேகைக்கு நகர்த்தணும். அடுத்து சுண்டு விரலின் கீழ் ரேகை; அங்கிருந்து சுண்டு விரலின் நடு ரேகை, மேல் ரேகை; அப்படியே மேலே உள்ள ரேகைகளிலேயே போய் மோதிர விரல், நடுவிரல், சுட்டு விரல் மேல் ரேகைகளை தொட்டு சுட்டு விரலில் கீழாக இறங்கணும். நடு ரேகை கீழ் ரேகை முடித்தா பத்து ஜபம் ஆகும். அங்கேயே 11 ஆவது ஜபம். வந்த வழியே திரும்பினால் மோதிர விரலோட நடு ரேகை வரும்போது 20. அங்கேயே மீண்டும் ஆரம்பித்து எண்ண வேண்டும். இப்படியே ஐந்து சுற்று வந்தால் 100 பூர்த்தி ஆகும்.

7. இதில நடுவிரலோட நடு, கீழ் ரேகைகள் எண்ணப்படலையே!
ஆமாம். இதை மேரு என்பாங்க. இதை தாண்டக்கூடாது என்பதால அந்த இடத்தில கட்டை விரல் வைத்து எண்ணுவதில்லை.

https://hinduismforall.forumotion.com

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum